பிரையண்ட் பூங்காவில் நாற்று நடும் பணி தீவிரம்

பிரையண்ட் பூங்காவில் நாற்று நடும் பணி தீவிரம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இறுதி கட்ட நாற்று நடவு பணி தீவிரமாக நடக்கிறது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இறுதி கட்ட நாற்று நடவு பணி தீவிரமாக நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.

இதனையடுத்து நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்கான பூக்கள்,பூத்து குலுங்கும் இதனை தொடர்ந்து இறுதி கட்ட நாற்றுகள் நடுவதற்கு ஊட்டி,பெங்களூரில் இருந்து 50,000 நாற்றுகள் சால்வியா,மேரி கோல்டு உள்ளிட்ட மலர் வகைகள் நடவு செய்யப்படும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர், இதனை தொடர்ந்து கோடை சீசனில் லட்சக்கணக்கான பூக்கள் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பூத்து குலுங்கும் என தோட்டக்கலை துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story