கல்லங்குழி: மரக்கன்று நடும் விழா ₹

கல்லங்குழி: மரக்கன்று நடும் விழா ₹

மரக்கன்று நடும் விழா

கல்லங்குழி தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கல்லங்குழி அரசு தொடக்கப்பள்ளியும், நெய்யூர் தனியார் கல்லூரியும் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தின.

பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் வ வக்கீல் ஜெஸ்டின் ஜெஸ்பரதாஸ், சமூகநல செவிலியர் துறை தலைவர் டாக்டர் பெமிலா டார்லிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார், துணை தலைவர் துரைராஜ் மனுவேல் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

Tags

Next Story