பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
கடையநல்லூரில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி நேற்று 2 வது நாளாக சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் வழிகாட்டுதலில், மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்றும் கடைகளில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Tags

Next Story