பிளாஸ்டிக் பையால் விபத்து - பெண் போலீஸ் படுகாயம்

பிளாஸ்டிக் பையால் விபத்து - பெண் போலீஸ் படுகாயம்
விபத்து 
குளச்சலில் பிளாஸ்டிக் பையால் விபத்து ஏற்பட்டதால் பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காட்டாத் துறையை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அனுஷா (33). இவர் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டார். நேற்று பணி முடித்து இவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். குளச்சல் அருகே ரீத்தாப்புறம் பேரூராட்சி அலுவலகத்தின் அருகே செல்லும்போது காற்றில் பறந்து வந்த பிளாஸ்டிக் பை ஒன்று அவரது ஸ்கூட்டர் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் தடுமாறி ஸ்கூட்டருடன் அனுஷா கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காய ஏற்பட்டது. அப்பகுதியினர் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்க அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் அனிஷாவுக்கு பின்னால் பைக் ஓட்டி வந்து மோதிய காஞ்சாம்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story