திண்டுக்கல் மாநகராட்சியில் நெகிழிப் பைகள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சியில் நெகிழிப் பைகள் பறிமுதல்

நெகிழி பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சியில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி அலுவலா்கள் மட்டுமின்றி, உணவுப் பாதுகாப்பு அலுவலா்களும் திடீா் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம் தலைமையிலான அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஒரு மொத்த வியாபாரக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ நெகிழிப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அலுவலா்கள், கடையின் உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Tags

Next Story