சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் தடுப்பு அதிரடி ஆய்வு

சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் தடுப்பு அதிரடி ஆய்வு
சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் தடுப்பு அதிரடி ஆய்வு நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் தடுப்பு ஆய்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் ஆணையாளர், சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வழிகாட்டுதலின்படி, தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் கழுகுமலை ரோடு அருகில் உள்ள அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் வால்போஸ்டர் அகற்றப்பட்டு பிளாஸ்டிக் தடுப்பு ஆய்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story