குற்றாலம் அருவி கடை பகுதியில் பிளாஸ்டிக் பறிமுதல்

குற்றாலம் அருவி கடை பகுதியில் பிளாஸ்டிக் பறிமுதல்

குற்றாலம் அருவி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


குற்றாலம் அருவி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சுசாமா மற்றும் சுகாதார அலுவலர் ராஜா கணபதி மற்றும் ஊழியர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு இதில் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் களை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags

Next Story