குடியரசு தின விழாவிற்கு தயாராகும் விளையாட்டு மைதானம்

குடியரசு தின விழாவிற்கு தயாராகும் விளையாட்டு மைதானம்

காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில் விளையாட்டு மைதானம் தயாராகி வருகிறது.

காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழாவை விமரிசையாக கொண்டாடும் வகையில் விளையாட்டு மைதானம் தயாராகி வருகிறது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அண்ணா காவல் அரங்கம் உள்ளது. இங்கு, விடுமுறை தினங்களில், இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்கள் நல திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெறும். ஜன.,26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நல திட்ட உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கு, விளையாட்டு மைதானத்தில் மண் சமப்படுத்தும் பணியை, பொதுப்பணி துறையினர் துவக்கி உள்ளனர். விளையாட்டு அரங்கத்திற்கு வெள்ளையடிக்கும் பணிக்கு பின், குடியரசு தின விழா நேரத்தில் அலங்கரிக்கும் பணி நடக்கும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story