நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்பு!

நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்பு!

பட்டிமன்றம் 

விநாயகபுரம் நடுநிலைப் பள்ளியில் நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட விநாயகபுரம் நடுநிலைப்பள்ளியில் நெகிழி பயன்பாடு நன்மையே... தீமையே... என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற முடிவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழியை (SUPs - Single Use Plastics) பயன்படுத்துவது இல்லை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story