குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினம் 

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் வரதராஜன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் துணை ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story