திருச்சி 17 வது வார்டின் அவலநிலை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி 17 வது வார்டின் அவலநிலையை கவுன்சிலர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் இந்திய திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டும்‍, புதிதாக சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் அமைந்துள்ள பூக்கொல்லை தெருவில் இன்று காலையில் தோண்டப்பட்டு வேலைகள் முடிவு பெறாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராமல் பெண் ஒருவர் தவறி விழுந்தார். உடனடியாக தவறி விழுந்த வயதான பெண்மணியை பலத்த காயங்களுடன் அந்த தெருவாசிகள் மீட்டனர். மழை காலங்களில் சாலைகள் பராமரிப்பு பணி நடைபெறாது எனவும் தோண்டப்பட்ட குழிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் பாதுகாக்கப்படும் எனவும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

ஆனால் பல முறை அந்த பகுதியின் ஆளும்கட்சி கவுன்சிலரிடம் இந்த பாதாள சாக்கடை குழிக்கு தீர்வு கேட்டும் இன்று வரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் வார்டு பணிகளில் கூட சுனக்கம் காட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதற்கு தீர்வே இல்லையா என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர் படி ஏற்படும் முன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story