குமரியில் இன்று பிளஸ் 1 தேர்வு துவக்கம்

குமரியில் இன்று பிளஸ் 1 தேர்வு  துவக்கம்
பைல் படம்
இன்று துவங்கும் +1 பொதுத்தேர்வை கன்னியாகுமரி மாவட்டத்தில் 22,446 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொது தேர்வு இன்று 4-ம் தேதி துவங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 287 பள்ளிகளை சேர்ந்த 10,922 மாணவர்கள் 1 1,524 மாணவிகள் என மொத்தம் 22, 446 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது தேர்வுக்கு முன்னேற்பாடு பணிகள் நடந்தன. இதன்படி நேற்று தேர்வு மையங்களில் மாணவர்களின் பதிவு எண் எழுதுவது, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது, சுத்தம் செய்வது போன்ற பணிகள் நடந்தன.

இன்று காலை தேர்வு துவங்குகிறது. முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேள்வி தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேர்வு முறைகேடுகள் நடக்காமல் தடுக்க முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story