பிளஸ் 1 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

பிளஸ் 1 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
பைல் படம்


காயல்பட்டினத்தில் பிளஸ் 1 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பெரிய நெசவாளர் தெரு வசிப்பவர் சாகுல் ஹமீது இவரது மகன் முகமது அதிப் முகாதீர் (17), ஆறுமுகநேரியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் இவருக்கு நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாம். அதற்காக சிசிக்கைகள் பெற்றும் குணமாகவில்லையாம். இதனால வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story