பிளஸ்-1 மாணவி கர்ப்பம் - மாணவன் கைது

பிளஸ்-1 மாணவி கர்ப்பம் - மாணவன் கைது
பைல் படம்
நாகர்கோவிலில் பிளஸ்-1 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய பிளஸ்-1 மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள தாழக்குடியை சேர்ந்த சிறுமி ஒருவர் நாகர்கோவில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கும் மற்றொரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் முட்டம் பகுதி சேர்ந்த மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு பேரும் காதலிக்க தொடங்கினர். அப்போது பல ஊர்களுக்குள் ஒன்றாக சேர்ந்து சுற்றியதாக கூறப்படுகிறது.

காதலித்தபோது மாணவியின் வீட்டில் ஆளில்லா நேரத்தில் அவரது வீட்டுக்கு அடிக்கடி மாணவர் சென்று, அந்த மாணவியை பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பம் அடைந்தார். மாணவி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் உடனே நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story