பிளஸ் 2 மாணவி தற்கொலை

பிளஸ் 2 மாணவி தற்கொலை

பைல் படம்

மதுரவாயல், ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 23. இவரது தங்கை ஹரிணி, 16. பெற்றோர் பிரிந்து சென்ற நிலையில், அண்ணனும் தங்கையும் தனியாக வசித்தனர். ஹரிணி, ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மகேஷ்குமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், ஹரிணி உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story