மோடி அரியணை ஏறினால் இந்தியா வல்லரசாகும் - ஜி.கே.வாசன் நம்பிக்கை

மோடி அரியணை ஏறினால்  இந்தியா வல்லரசாகும் - ஜி.கே.வாசன் நம்பிக்கை

 ஜி.கே.வாசன் பிரச்சாரம் 

மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறும் போது இந்தியா வல்லரசாக மாறும். அப்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்புவனத்தில் சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடும் தேவநாதன் யாதவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரம் உயர, உயர இந்திய நாட்டின் பொருளாதாரமும் உயரும். கச்சத்தீவு பிரச்சினையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வரலாற்று பிழை செய்தது. அதற்கு துணை போனது திமுக. மீனவர் பிரச்சனையில் திமுகவும், காங்கிரசும் நீலி கண்ணீர் வடிக்கிறது. மீனவர்கள் யாரும் திமுக காங்கிரசை ஒரு போதும் நம்ப தயாராக இல்லை.

மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறும் போது இந்தியா வல்லரசாக மாறும். அப்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும். பெண்களுடைய முன்னேற்றம் இந்தியாவின் முன்னேற்றம் என பிரதமர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுக அரசு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தது போல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் திமுக அரசு நீடிக்க கூடாது என்றால் இப்போது தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார்

Tags

Next Story