பிரதமர் மோடியின் நினைப்பு இங்கு பலிக்காது - அமைச்சர் மனோ தங்கராஜ்

பிரதமர் மோடியின் நினைப்பு  இங்கு பலிக்காது - அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் பேட்டி
அரசியல் நிகழ்வுக்கு தான் பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். பொதுமக்களிடம் குறை கேட்க வரவில்லை. எத்தனை முறை வந்தாலும் அவர்கள் நினைப்பது தமிழகத்தில் நடக்காது. பிரதமர் நினைப்பு இங்கு பலிக்காது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென் மாவட்ட மக்கள் ஆபத்து நேர்ந்த நேரங்களில் பிரதமர் மோடி வரவில்லை என்று மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அவரின் சார்பில் நிதி அமைச்சர் வந்த பிறகும் மக்களுக்கு ஆறுதல் கூறாமல் சென்றுவிட்டனர். எவ்வளவு கேட்ட பிறகும் நிதி கொடுக்கவில்லை. பல இடங்களில் கால்வாய்கள் உடைந்து, குளங்கள் உடைந்து, இது போன்றவற்றுக்கு எல்லாம் மாநில அரசு நிதியை வைத்து பணிகள் நடக்கிறது. ஒன்றிய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை வரவில்லை.

அரசியல் நிகழ்வுக்கு தான் பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். பொதுமக்களிடம் குறை கேட்க வரவில்லை. எத்தனை முறை வந்தாலும் அவர்கள் நினைப்பது தமிழகத்தில் நடக்காது. பிரதமர் நினைப்பு இங்கு பலிக்காது. கருத்துக்கணிப்புகள் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளார்கள். பாரதிய ஜனதாவுக்கு ஒரு சில இடங்களில் டெபாசிட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story