பாரத பிரதமர் 73 வயதிலும் 18 மணி நேரம் உழைக்கிறார் -மத்திய இணையமைச்சர்

பாரத பிரதமர் 73 வயதிலும் 18 மணி நேரம் உழைக்கிறார் -மத்திய இணையமைச்சர்

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்ல ஜே 

பாரத பிரதமர் 73 வயதிலும் 18 மணி நேரம் உழைக்கிறார். தேர்தலின் போது சொல்லப்பட்ட 10 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வாக்குறுதி இப்போது சாத்தியமாகி இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்ல ஜே தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே இலுப்பைக்குடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லைக் காவல் படைப் பயிற்சி மையத்தில் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ், பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இந்தோ திபெத் படை துணை காவல் துறை தலைவர் அக்சல் சர்மா, நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்ல ஜே கலந்து கொண்டு 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசிய போது, "பாரத பிரதமர் 73 வயதிலும் 18 மணி நேரம் உழைக்கிறார். தேர்தலின் போது சொல்லப்பட்ட 10 லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வாக்குறுதி என்பது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இந்த பன்னிரெண்டாவது ரோஸ்கார் மேளாவில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பேர் இன்று பணி நியமனத்தை பெறுவதாக தெரிவித்தார்.

பணி நியமனம் பெறும் அனைவரும் அவரவர் துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நாம் இன்றைய தொழில் நுட்பங்களை சரியாக பயன்படுத்தும் போது உலகில் முதல் இடத்திற்கு நம் இந்தியாவை கொண்டு செல்ல முடியும் உங்களை நீங்கள் உயர்த்திக் கொண்டால் அனைத்து துறைகளும் முதன்மை நிலை அடையக்கூடியதாக அமையும் என்றும், தனது வேளாண் துறையில் 30 ஆயிரம் பெண்களுக்கு டிரோன் மூலம் விதை தூவல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயிற்சி அளித்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வளாகத்தில் ஆயுத தளவாடம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அஞ்சலகம், இந்திய தொழில் நுட்ப கழகம், வன பாதுகாப்பு மற்றும் தேசிய வங்கி என மொத்தம் 8 துறைகளில் பணிபுரிய 138 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றனர். இந்த நிகழ்வில் இந்தோ திபெத் படை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் யாதவ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story