பாமக வேட்பாளர் பாலு பிரச்சாரம்!

தக்கோலம் பேரூராட்சியில் பாமக வேட்பாளர் பாலு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் கே பாலு தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகள் பிரம்மாண்ட மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வேட்பாளர் பாலு பொதுமக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை சேகரித்தார். அப்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.

Tags

Next Story