செய்யூர் சுற்றியுள்ள பகுதிகளில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்யூர் சுற்றியுள்ள பகுதிகளில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்யூர் சுற்றியுள்ள பகுதிகளில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வரும் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் மற்றும் நகர் பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலமாகவும் இருசக்கர வாகனம் மூலமாகவும் நடை பயணமாகவும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணியில் அங்க வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஜோதி வெங்கடேசன், செய்யூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அப்பகுதியில் கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்து வருகிறார்.. அவர் ஆதரவாக இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொடிகளின் உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்..பெண்கள் வேட்பாளரை ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்று அவருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.. செய்யூர் ஒன்றியத்துக்குட்பட்ட,நீலமங்கலம் பரமேஸ்வரி,

மங்கலம்,கடலூர் ஊராட்சி, பவுஞ்சூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு வாகனம் மூலமாக மாம்பழம் தினத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story