நூதன முறையில் பிரச்சாரம் செய்த பாமக வேட்பாளர் !

நூதன முறையில் பிரச்சாரம் செய்த  பாமக வேட்பாளர் !

பாமக

திண்டுக்கல் பாமக வேட்பாளர் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக கவிஞர் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரம் நூதன முறையில் செல்லும் இடங்கள் எல்லாம் நடத்தப்படுகிறது. ஆத்தூரில் கூட்டமான இடத்தில் வடையை சுட்டு ஓட்டு கேட்டார். திண்டுக்கல் வெங்காய மண்டியில் வெங்காயத்தை தரம் பிரித்து ஓட்டு கேட்டார். உங்க வயிறுவெடிகளுக்கு சென்று பூச்சிகளால் பாதிக்கப்பட்ட செடிகளுக்கு பூச்சி மருந்து தெளித்து ஓட்டு கேட்டார். நத்தம் பகுதியில் ஒத்தக்கடையில் கயிறு தயாரித்து ஓட்டு கேட்டார். இந்நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல், ராஜக்காபட்டி அருகே தம்பகுளத்துப்பட்டியில் பெண் விவசாயிகளுடன் சேர்ந்து கிராமிய பாடல் பாடி நாத்து நட்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story