காலபைரவர் கோவிலில் வழிபாடு செய்த பாமக வேட்பாளர்

அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேசிய கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முனைவர் செளமியா அன்புமணி அருள்மிகு தட்சணை காசி காலபைரவர் கோவிலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் செய்தார் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story