கடத்தூர் அருகே பாமக கொடியேற்று விழா

கடத்தூர் அருகே பாமக கொடியேற்று விழா

பா.ம.க கொடியேற்று விழா 

கடத்தூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்று விழா மற்றும் தலைமை நிலை செயலாளருக்கு அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தல்பாடி ஊராட்சி பள்ளிப்பட்டி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் கொடியேற்றி இனிப்பு வழங்கினர், பின்னர் தலைமை நிலை செயலாளர் இசக்கியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story