விக்கிரவாண்டியில் பாமக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டியில் பாமக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டியில் பாமக வாக்குச்சாவடிமுகவர்கள் ஆலோசனை கூட்டம்
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பா.ம.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அசோகபுரியில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் புகழேந்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பணிக்குழு ஜெயராமன் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் 2026 சட்டமன்றத்தேர்தலில் எவ்வாறு நிர்வாகிகள் பணி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். இதில் ஊடக பிரிவு மாநில செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட துணை செயலாளர் அறிவன்யேசு, துணை தலைவர் தண்டபாணி, விவசாய அணி மாவட்ட செயலாளர் தட்சி ணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலை வர் அய்யப்பன், கிளை செயலாளர் பாபு, பிரதீப் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story