சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

போக்சோ வழக்கில் கைது

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் சிறுமியை கர்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்ததுடன், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். முதலில் திருமணத்தை எதிர்த்த பெற்றோர்கள், பின்னர் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து, தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியின் ஆதார் அட்டையை பார்த்து மருத்துவர்கள், சிறுமிக்கு 16 வயதே ஆனதால், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் திருமண வயது ஆகாமல் திருமணம் செய்து, 9 மாதம் கர்ப்பமாக உள்ளது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த மாரி முத்து, அவரது பெற்றோர் முருகேசன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story