தூத்துக்குடியில் மாணவர்களுக்கான கவிதை போட்டிகள் 

தூத்துக்குடியில் மாணவர்களுக்கான கவிதை போட்டிகள் 

மாவட்ட ஆட்சியர் 

தூத்துக்குடி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்  நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மற்றும் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் வாயிலாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரையும் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரையும் அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் என ஆட்சியர் லட்சுமிபதி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story