பொலம்பாக்கம் பள்ளி காலை உணவில் பல்லி: மாணவர்கள் மயக்கம்
மயக்கம் அடைந்த மாணவிகள்
செங்கல்பட்டு மாவட்டம்,பொலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவில் பல்லி விழுந்திருப்பதைக் கண்ட மாணவர்கள் இருவர் வாந்தி. செங்கல்பட்டு மாவட்டம், பொலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் இன்று காலை உணவு திட்டப்படி 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை 40 மாணவ மாணவிகள் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களில் சிலருக்கு வாந்தி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அதிகமான வாந்தி எடுத்த மாணவிகளை பொலம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்கு பின்னர் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்தனர்.
பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுக்கவே இப்பகுதியில் கொண்டு பரபரப்பு ஏற்பட்டது.