கரடி நடமாட்டம் குறித்து காவல்துறை எச்சரிக்கை

கரடி நடமாட்டம் குறித்து காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலியில் கரடி நடமாட்டம் குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


திருநெல்வேலியில் கரடி நடமாட்டம் குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக இரவு ரோந்தில் இருந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாவலாக சென்று வரவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரடிகளை கண்டால் காவல்துறைக்கோ அல்லது வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story