ரயில் மறியல் போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் குவிப்பு

ரயில் மறியல் போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் குவிப்பு

போலீசார் குவிப்பு 

தமிழர் விடுதலை கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அம்பத்தூர் ரயில் நிலையத்தை சுற்றி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சீட்டு கட்டண சலுகையை இந்திய ரயில்வே பறித்து இருப்பதை கண்டித்தும் அனைத்து கட்சிகள் ஜனநாயக அமைப்புகளின் சார்பில் அம்பத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தை தமிழர் விடுதலை கழகம் அறிவித்திருந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அம்பத்தூர் மார்கெட் முதல் ரயில் தண்டவாளம், டிக்கெட் கவுண்டர், கனரா வங்கி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் என 200க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story