பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸார் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸார் கைது

சூதாடிய இருவர் கைது

அன்னவாசல் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வீரபட்டி அய்யனார் கோயில் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அன்னவாசல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் சத்தியாதேவி தலைமையிலான போலீஸார் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அய்யனார் கோயில் அருகே பொதுவெளியில்சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தெற்குகளம் சுப்பையா (45), வீரபட்டி சொக்கலிங்கம் (33) ஆகிய இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டு மற்றும் ரொக்கம் 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story