கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 8 பேர் போலீசார் கைது

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 8 பேர் போலீசார் கைது

போலீசார் கைது

திருச்சி மாநகரம் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில் அல்லாஹ் பிச்சை என்பவர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அவர் வீட்டில் இருந்த அல்லாஹ் பிச்சை மற்றும் அவரின் கூட்டாளிகள் ஜெரால்ட் (வயது 27) ஜேம்ஸ் (வயது 52) ஜெயபிரகாஷ் (வயது 23) ஆல்பின் (வயது 21) ஆகாஷ் (வயது 20) நித்தின் (வயது 22) சுனில் (21)ஏழு பேர் ஆகியோரிடம் சுமார் மூன்று கிலோ அளவில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் ஒரு கத்தி, திருடப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருந்துள்ளது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அல்லா பிச்சை உள்ளிட்ட எட்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story