மோட்டார் பைக்கை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் பைக்கை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பைக் திருட்டு

திருச்சி அருகே வாகன சோதனையின் போது பைக்கை திருடி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அருகே தண்டவம்பட்டி பேருந்து நிறுத்த பகுதியில் தாத்தையங்கார்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வாகன பதிவு எண் இல்லாமல் வந்த மோட்டார் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அது திருட்டு வண்டி என தெரியவந்தது. மேலும் விசாரணையில் மோட்டார் பைக்கை திருடி வந்தவர் முசிறி கரிகளி, வடுகர் தெருவை சேர்ந்த 25 வயதான ரமேஷ் கண்ணா என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த தாத்தையங்கார்பேட்டை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story