பெண் தீ குளிப்பு - தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது!

பெண் தீ குளிப்பு - தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது!

கைது

போளூர் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த விளாபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(29). இவரது மனைவி சந்தியா(வயது 21). இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சந்தியா மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர்கள் சந்தியா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவரை கைது செய்யக் கோரியும் மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய சீனிவாசனை கைது செய்தனர்.

Tags

Next Story