முதல் திருமணத்தை மறைத்த காவலர் கைது

முதல் திருமணத்தை மறைத்த காவலர் கைது

காவலர் கைது

நித்திரவிளை அருகே இளம் பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த காவலர் கைது செய்யப்பட்டார்.

கிள்ளியூர் தொகுதி நித்திரவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அம்பாசமுத்திரம் பகுதி சேர்ந்த ராஜேஷ் (26) என்பவருக்கு நேற்று கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமண நடந்தது.

ராஜேஷ் மணிமுத்தாறு 9 -வது பட்டாலியனில் தலைமை எழுத்தர் ஆக பணிபுரிந்து வருகிறார்.அப்போது அந்த திருமண பெண்னின் உறவினரான மற்றொரு பெண் போலீஸ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு புதுமண தம்பதிகளை படம் எடுத்து காவலர் வாட்சப் குரூப்பில் வாழ்த்து தெரிவித்து பதிவு இட்டார்.

இதில் பல கமெண்ட் வந்த நிலையில் ராஜேஷுக்கு ஏற்கனவே திருமணம்ஆனதாகவும் கமெண்ட் வந்தது. உடனே அவர் திருமண பெண் வீட்டிற்கு தகவல் கொடுத்தார். அப்போது பெண் வீட்டார் ராஜேஷ் வெளியே போக விடாமல் சுற்றி வளைத்து வைத்து, நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் நடத்திய விசரணையில், இவருக்கு திருமணமாகி மனைவி காவலர் குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது.

தாய் தந்தை இறந்து விட்டார்கள் உறவினர்கள் யாரும் இல்லை நண்பர்கள் மட்டும் தான் உண்டு என்று கூறி ராஜேஷ் இந்த திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் நண்பர்கள் 5 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Tags

Next Story