மொபட் திருடர்கள் கைது!

மொபட் திருடர்கள் கைது!

காவல்

இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கீரனுார்:திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(53). புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் முனியன்(55). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்தனர். சம்பவத்தன்று குளத்துாரில் உள்ள பழைய இரும்பு கடைக்கு 2 மொபட்டுகளை விற்க வந்தபோது, சந்தேகமடைந்த கடை உரிமையாளர் கீரனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சப் இன்ஸ்பெக்டர் மார்ட்டின்ராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்து மொபட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story