பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு!

பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு!

காவல்துறை விசாரணை


சேத்துப்பட்டில் வீடுகளை திறந்து வைத்து தூங்கக்கூடாது என பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ‌.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காவல்துறை சார்பில் உதவி காவல் ஆய்வாளர் சார்புதின், ஆனந்தன், குணசேகர் அருள், மற்றும் போலீசார் சேத்துப்பட்டில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வெப்பம் அதிகரிப்பதால் இரவு நேரங்களில் வீடுகளின் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கக்கூடாது. இது திருடர்கள் புகுந்து திருடுவதற்கு வாய்ப்பாக இருக்கும். அதனால் வீட்டை பூட்டி, ஜன்னலை மூடி வைத்து தூங்க வேண்டும் என்று கூறினர் ‌.

Tags

Read MoreRead Less
Next Story