காவல்துறை சார்பில் பூசணி உடைப்பு குறித்த விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் பூசணி உடைப்பு குறித்த விழிப்புணர்வு

துண்டு பிரசுரம் வழங்கல்


குமாரபாளையம் பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பூசணிக்காய் உடைப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் வியாபாரிகள் தங்கள் கடைகளில் மற்றும் பேக்டரியில் ஆயுத பூஜை முன்னிட்டு பூஜை போட்டு பூசணிக்காயை நடு ரோட்டில் உடைத்து விடுகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்காமல் விழுந்து விடுகிறார்கள்.

சிலநேரங்களில் பெரும் விபத்து ஏற்பட்டுவிடுகிறது கடை வியாபாரிகள் நடுரோட்டில் பூசணிக்காய் உடைக்க கூடாது என வலியுறுத்தி விடியல் ஆரம்பம் பவுண்டேசன் சார்பில் குமாரபாளையம் மதிப்பிற்குரிய காவல்துறை ஆய்வாளர் தவமணி அவர்கள் கடைகளுக்குச் சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்கள்.

Tags

Next Story