ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு காவல்துறை வழக்கு !

ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு காவல்துறை வழக்கு !
கஞ்சா கடத்தல்
ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தலில் நபருக்கு காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி செல்வதாக நேற்று மாலை திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் போலீசார் சோதனை பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த பவன்குமார், 20 என்பது தெரிந்தது. அவரிடமிருந்த பேக்கில் 12,000 ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பவன்குமாரை திருவள்ளூர் போதை தடுப்பு மற்றும் மதுவிலக்கு போலீசாரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story