நெல்லையப்பர் கோவிலில் போலீசார் தீவிர சோதனை

நெல்லையப்பர் கோவிலில் போலீசார் தீவிர சோதனை

சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார் 

வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில் நெல்லையப்பர் கோவிலில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் வழிபாட்டு தலங்களுக்கு மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் இன்று (மார்ச் 7) திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் வளாகம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் கோயிலுக்குள் நுழையும் பக்தர்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

Tags

Next Story