சிவன்மலை பஞ்சாயத்து ஊழியர்களுடன் போலிசார் கலந்தாய்வு கூட்டம் !

சிவன்மலை பஞ்சாயத்து ஊழியர்களுடன் போலிசார் கலந்தாய்வு கூட்டம் !

திருப்பூர் 

சிவன்மலை பஞ்சாயத்து ஊழியர்களுடன் போலிசார் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று காலை பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் காங்கேயம் போலிசார்கள் இடையே கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமை தாங்கினார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளையும், இங்கு நடக்கும் குற்றச் செயல்கள், அரசு சார்ந்து தேவைப்படும் உதவிகள், சமூதாய சீர்கேடுகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை எங்களிடம் தெரிவிக்கலாம். எங்களுக்கு தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையோ அல்லது சம்பந்தப்பட்ட துறையின் உதவியுடனோ பொதுமக்கள் தேவைகள் கூடிய விரைவில் பூர்த்தி செய்து தரப்படும்.

இது போன்று கூட்டங்கள் இனி வரும் நாட்களில் பஞ்சாயத்து ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் போலிசாருக்கிடையே ஒரு நட்புறவை மேம்படுத்தும் விதமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் அலுவலக பணியாளர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story