ஆலங்குளத்தில் கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை

ஆலங்குளத்தில் கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை
ஆலங்குளத்தில் கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை
திமுக கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை நடத்தினர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மக்களவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி, ஆலங்குளம் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். இக்கூட்டத்துக்கு, டி.எஸ்.பி. ஜெயபால் பா்ணபாஸ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தாா். அப்போது, காமராஜா் சிலை கீழ்புறம் சிறிய அளவிலான கூட்டங்கள் நடத்தவும் காவல் நிலையம் அருகில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், உரிய அனுமதி பெறாமல் புதிய கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், திமுக சாா்பில் பொருளாளா் சுதந்திரராஜன், சந்திரன், அதிமுக நகரச் செயலா் சுப்பிரமணியன், முத்துராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் வில்லியம் தாமஸ், ஏசுராஜன், விவிங்ஸ்டன், பாஜக அன்புராஜ், பண்டரிநாதன், தேமுதிக மாவட்டச் செயலா் பழனிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலு, குணசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story