பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

காவல் துணைக் கண்காணிப்பாளர்-1, காவல் ஆய்வாளர்-10, உதவி ஆய்வாளர்கள்-16, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்- 3,தலைமை காவலர்-10,முதல் நிலைக் காவலர்-7,காவலர்கள்-34 என மொத்தம்-81 நபர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்ககினார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு விபத்துகளை குறைக்கும் பொருட்டும்,போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story