போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி !

போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி !

கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் நடைபெற்றது. மேலும் இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியானது காலையில் வி.களத்தூர் மற்றும் கை.களத்தூர் பகுதியிலும் மாலையில் அன்னமங்கலம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்) துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) தனசேகர் மங்களமேடு உட்கோட்டம் மற்றும் மத்திய சேமக்காவல் படை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதக்கரா தருவா மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஹேம்ராம் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story