சேலம் மாவட்டம் மேட்டூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

மேட்டூர் அருகே மேச்சேரியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மேட்டூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பொது மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களித்திட துப்பாக்கி ஏந்திய கர்நாடக ஆயுதப்படை போலீசாருடன் மேட்டூர் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினர். இதனை மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேச்சேரி எரகுண்டபட்டியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு , சாம்ராஜ் பேட்டை பத்திரகாளியம்மன் கோவில், பேருந்து நிலையம் வழியாக சென்று மேச்சேரி காவல் நிலையத்தை வந்தடைந்தது. இதில் கர்நாடக மாநில சிறப்பு ஆயுத படை போலீசார் 50 பேரும் ,மேட்டூர் போலீசார் 40 பேரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story