சங்கரன்கோவிலில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பு

சங்கரன்கோவிலில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பு

 கொடி அணி வகுப்பு 

சங்கரன்கோவிலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி தமிழக போலீசார் மற்றும் கேரள சிறப்பு அதிரடி படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க வழி செய்யும் வகையில் மாவட்ட காவல் துறையும், தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சங்கரன்கோவில் நகர் பகுதி மற்றும் நெடுங்குளம் கிராமத்தில் கேரளா சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story