எடப்பாடியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

எடப்பாடியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

கொடி அணிவகுப்பு 

எடப்பாடியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக காவல்துறையினர் மற்றும் ஜார்கண்ட் மாநில ஆயுத படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் விறுவிறுப்பான நிலையை எட்டி உள்ளது தொடர்ந்து சேலம் சேலம் சேலம் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சங்ககிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்பட 85 போலீசாரும்,ஜார்க்கண்ட் மாநில ஆயுதப்படை வீரர்கள் 45 பேர் மொத்தம் 130 பேர் நாடாளுமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை மாலை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போலீஸ் அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் எடப்பாடி நகரத்தின் உட்பட்ட வெள்ளாண்டி வலசு பகுதியில் இருந்து நைனம்பட்டி, பஸ் நிலையம், மேட்டுதெரு முக்கிய வீதி வழியாக எடப்பாடி காவல் நிலையத்தை வந்தடைந்தனர்.

Tags

Next Story