சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு ஊர்வலம் 

சங்கராபுரத்தில் போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
சங்கராபுரம் தொகுதியில் மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், போலீசார், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், ஊர் காவல் படையினர் உள்ளிட்ட, 100 பேர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்துக்கு, எஸ்.பி., சமய்சிங்மீனா தலைமை தாங்கினார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். தேர்தலில் மக்கள் 100 சதவீதம் ஓட்டளிக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எஸ்.பி., சமய்சிங் மீனா கூறினார்.

Tags

Next Story