சிறுகளத்தூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

சிறுகளத்தூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

சிறுகளத்தூரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வாக்காளர்கள் தைரியமாக வாக்களிக்க நாங்கள் பாதுகாப்புக்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர், ஏப்.18- மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பாதுகாப்பாக ஜனநாயக கடமையை நிறைவேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகளத்தூர் பொன்பரப்பி வரை காவல் துறையினர் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி ஆரி, அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story