போலீசாரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி

போலீசாரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி

கொடி அணிவகுப்பு 

சூணாம்பேடு காவல் எல்லைக்குட்பட்ட பதற்றமான ஓட்டுச்சாவடி பகுதிகளில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலில், அனைத்து வாக்காளர்களும் அச்சமின்றி ஓட்டு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூணாம்பேடு காவல் எல்லைக்குட்பட்ட பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ள கடப்பாக்கம், சூணாம்பேடு, கடப்பாக்கம்குப்பம், ஆலம்பரைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக, போலீசாரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சூணாம்பேடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம்ஏற்பாட்டில் நடந்த கொடி அணிவகுப்பில், மதுராந்தகம் டி.எஸ்.பி.,சிவசக்தி தலைமைவகித்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 50 பேர், தமிழக காவல் துறையினர் 50 பேர் என, மொத்தம் 100 போலீசார்கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

Tags

Next Story