விவாகரத்து தரக்கோரி பெண்னை மிரட்டிய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

விவாகரத்து தரக்கோரி பெண்னை மிரட்டிய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

விவாகரத்து தரக்கோரி பெண்னை மிரட்டிய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பி.என் புதூர் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் நந்தினி குமாரி. இவருக்க அருண் சதீஷ் என்பவருடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது முப்பது பவுன் நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என அருண் சதிஷ் குடும்பத்தினர் கேட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நிலையில் அருண் சதீஷ்ற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் நந்தினி குமாரி பணம் மற்றும் நகைகளை வாங்கி வருமாறு கணவரின் குடும்பத்தினர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் திருமண தகவல் மைய இணையதளத்தில் விவாகரத்தான மணமகனுக்கு மணமகள் தேவை என அருண் சதீஷ் அவரது தந்தை கர்ணன் மற்றும் தாய் சாந்தி ஆகியோர் விளம்பரம் செய்து தன்னை விவாகரத்து தரக்கோரி வற்புறுத்தி தொல்லை அளிப்பதாக நந்தினிகுமாரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story